மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 18-ம் தேதி வரை 5 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஐயப்பன் கோவில் நடை திறப்பையொட்டி கோட்டயம்,  திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

Night
Day