திண்டுக்‍கல்: மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா - பக்‍தர்கள் தீர்த்தகுட ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்‍கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு, கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அம்மனை வழிபட்ட பின்னர் காப்பு கட்டி பக்‍தர்கள் விரதத்தை தொடங்கினர். திருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியாக பூக்‍குழி இறங்கும் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

varient
Night
Day