திருவண்ணாமலையில் நாக வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர், சந்திரசேகர்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை தீப திருவிழாவின் 4வது நாள் உற்சவத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தீப திருவிழாவின் 4வது நாள் காலை உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கோவிலின் 3ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிகளுக்கு மலர் மாலை அலங்காரம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட விநாயகர் மற்றும் சந்திரசேகர சுவாமிகள் ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நாக வாகனத்தில் எழுந்தருளி திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் நான்காவது நாள் இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மலர்களால் அலகரித்து வெள்ளி காமதேனு வாகனத்திலும், கற்பக விருச்சக வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

Night
Day