திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம் - பொது மேலாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில் தேவஸ்தான கொள்முதல் துறையின் பொதுமேலாளர் கைது செய்யப்பட்டார். திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்ய டெண்டர் எடுத்திருந்த நிறுவனங்கள் 90 சதவீதம் கலப்படம் செய்யப்பட்ட நெய்யை கடந்த 5 ஆண்டுகளாக சப்ளை செய்தது பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே திண்டுக்கல்லை சேர்ந்த டைரி நிறுவன அதிபர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிபிஐ சிறப்பு விசாரணை குழு தேவஸ்தான கொள்முதல் துறையின் பொது மேலாளராக பணியாற்றிய சுப்ரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

varient
Night
Day