சிவகங்கை: பத்ரகாளியம்மன் ஆலய பங்குனி பொங்கல் விழா பால்குட ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நாடார்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. விரதமிருந்த பக்‍தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோயிலுக்‍கு கொண்டு வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்‍கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்‍தர்கள் எடுத்துவந்த பாலைக்‍ கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. 

Night
Day