2023 ஐபிஎல் போட்டி - சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட வழக்கு : நடிகை தமன்னா விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சைபர் கிரைமில் புகாரளித்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், ஃபேர் ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களிடம் விசாரணை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், வரும் 29ம் தேதி நடிகை தமன்னா விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மகாராஷ்டிரா சைபர் கிரைம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Night
Day