ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சென்னை அணியின் ரச்சீன் ரவீந்திரா 37 ரன்களும், சிவம்துபே 34 ரன்களும், ரஹானே 27 ரன்களும் குவித்தனர். சென்னை அணியின் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 29 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Night
Day