ஈரோடு: மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோவை வாலிபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோட்டில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கோவையை சேர்ந்த வாலிபர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்று இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். தமிழ் பிட்னஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். உடல் எடையை அடிப்படையாக கொண்டு 7 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற கோவையை சேர்ந்த சுலைமான் என்ற வாலிபருக்கு மிஸ்டர் தமிழ்நாடு பட்டமும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது. 

Night
Day