இந்திய ஆடுகளம் குறித்து எந்தவித புகாரும் ​தெரிவிக்‍கமாட்டோம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய டெஸ்ட் தொடரின் போது ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தாலும் எந்தவித புகாரும் தெரிவிக்‍க மாட்டோம் என்று இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓலி போப் கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.  இந்தநிலையில் இந்தியா உடனான டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் துணை கேப்டன், இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் தான் ஆடுகளம் தயாரிக்கப்படுகிறது. அதுபோல் இந்தியா தங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தகுந்தபடி ஆடுகளத்தை அமைப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்று கூறியுள்ளார். 

varient
Night
Day