ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம் - 11 பேர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி வெற்றிகொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாராட்டு விழாவை காண சின்னசாமி மைதானத்திற்குள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நுழைந்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதால் ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

போலீசார் தடியடி நடத்தியபோது தடுமாறி கீழே விழுந்த ரசிகர்கள் மீது, பலர் ஏறி மிதித்து ஓடியதாக தெரிகிறது. இதில் மூச்சு பேச்சின்றி கிடந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 33-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆர்.சி.பி வெற்றிகொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

varient
Night
Day