அவுட் கொடுத்த பெண் நடுவரிடம் அஸ்வின் வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் அவுட் கொடுத்த பெண் நடுவருடன் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீகின் 4-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் அணிக்காக விளையாடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். ரீ-ப்ளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரிவ்யூக்களையும் திண்டுக்கல் அணி இழந்ததால் அவரால் ரிவ்யூ எடுக்க முடியவில்லை. இதனால் பெண் நடுவரிடம் வாக்குவாதம் செய்த அஸ்வின், பின்னர் ஆவேசத்துடன் தனது கிளவூசை தூக்கி வீசி அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அஸ்வினை வறுத்தெடுத்து வருகின்றனர். 

Night
Day