கோயில் கொடை விழாவில் மனித தலையுடன் சாமியாட்டம் - 5 பேர் மீது வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே கோயிலில் மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 6ஆம் தேதி உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசுவாமி கோயிலில் கொடை விழா நடைபெற்றது. அன்று இரவு வேட்டைக்கு சென்ற சாமியாடிகள் சுடுகாட்டில் அரைகுறையாக எரிந்த நிலையில் இருந்த மனித தலை மற்றும் கை, கால் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோயிலில் ஆக்கோரஷமாக சாமியாடினர். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதன் பேரில் 5 பேர் மீது 4 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

Night
Day