மோடி ஆட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்படும் - பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வளர்ந்த மற்றும் சுயசார்பு இந்தியாவிற்கு மத்திய அரசு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 11-வது ஆண்டையொட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த 11 ஆண்டுகளில் நிர்வாகம் வெளிப்படையான மற்றும் எதிர்காலம் சார்ந்த அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது என்றார். இந்த அமிர்த காலத்தில் 'விட்சித் பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து வருவதாகவும் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து உள்ளிட்ட சில முக்கிய நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலனை உறுதி செய்வதில் மோடி அரசாங்கத்தின் பணி நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் எனத் தெரிவித்தார். 

Night
Day