விருதுநகர்: சிறுமி வேன் சக்கரத்தில் சிக்கி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பள்ளி முடிந்து வந்த 5 வயது சிறுமி மீது வேன் ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சோலைசேரியை சேர்ந்த பெருமாள் என்பவருடைய 5 வயது மகள் சாய் ஷிவானி, ஆண்டாள்புரத்தில் உள்ள ரமணா வித்யாலயா பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். சோலைசேரி கிராமத்திற்கு பள்ளி பேருந்து வசதி இல்லாததால், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து, வாடகை வேன்மூலம் சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சாய் ஷிவானி, வேனில் இறங்கியபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. வேனின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Night
Day