வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கடலுக்கு செல்லாத மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கியுள்ளதால் புதுச்சேரி காரைக்கால் மாவட்ட மீனவர்கள், 6-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று காரைக்கால் மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் 6-வது நாளாக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Night
Day