மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஊழல் அம்பலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசு தனியார் மின் உற்பத்தி நிலையத்துடன் கைகோர்த்துக்கொண்டு மக்கள் தலையில் 11 ஆயிரத்து 212 கோடி ரூபாய் மின் கட்டணமாக சுமத்தி ஊழல் செய்ய முயற்சித்து வருவதாக தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியமும் விளம்பர திமுக அரசும் கூறிவருகிறது. இந்த சூழலில் மூலதன செலவு அதிகப்படியாக இருப்பதன் காரணமாக மின்சார கட்டணம் உயர உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி, தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர், மின்சார வாரியத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டு நஷ்டத்தில் இயக்கி வருவதாக குற்றம் சாட்டினார்.

அதேபோல் சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் தலையில் மின்சார வாரியம் 11 ஆயிரத்து 212 கோடியை மின் கட்டணமாக சுமத்த முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே விளம்பர திமுக அரசு, மின்சார வாரியத்தை லாப கணக்கில் நடத்த திட்டமிட்ட வேண்டும் என்றும் மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

Night
Day