கே.என்.நேரு மீது திமுக எம்.எல்.ஏ. அதிருப்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி கண்ணுடையான்பட்டியில் அமைக்கப்பட இருந்த சமுத்திர பாலம் திட்டத்தை மன்னச்சநல்லூர் பகுதிக்கு மாற்றிய அமைச்சர் கே.என்.நேரு மீது ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ  அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஒருவருக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டை மற்றவர்களுக்கு எடுத்து கொடுக்காதீர்கள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ பழனியாண்டி பேசியது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ மற்றும் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்று மாவட்ட வளர்ச்சி குறித்து உரையாடினர்.

கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கண்ணுடையான்பட்டியில் அமைக்கப்பட இருந்த சமுத்திர பால திட்டத்தை மன்னச்சநல்லூர் பகுதிக்கு கொடுத்துவிட்டதே அமைச்சர் நேரு மீது வருத்தம் வந்ததற்கான காரணம் என தெரிவித்தார். ஒருவருக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள் எனவும் அமைச்சர் நேரு மீதான அதிருப்தியை எம்ல்ஏ பழனியாண்டி வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாகவும், இது தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விக்குக்கு பதில் கூற முடியவில்லை எனவும் எம்எல்ஏ பழனிசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சர் கே.என்.நேரு மீது சொந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏவே அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Night
Day