முதியோரை குறிவைத்து குற்றச்சம்பவங்கள் - நீதிபதிகள் கவலை

எழுத்தின் அளவு: அ+ அ-

முதியோர்களை குறிவைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கவலை தெரிவித்துள்ளது. முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் நீதிமன்றம் குற்றம்சாட்டி உள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியகிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும், அடிப்படை வசதிகள்  முறையாக வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டிய நீதிபதிகள்,

முதியோர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் கருத்து தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதியோர் மையங்களை அமைப்பதற்கான நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும் எனவும், இல்லம் அமைப்பது மாநில அரசின் பணியே என கூறினார். 

அதற்கு நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது மத்திறிய அரசு பணி தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மூத்த குடிமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி பாதுகாப்பது அரசின் கடமை என நீதிபதிகள் கூறினர்.

எனவே இந்த வழக்கில் மத்திய, மாநில சமூக நலத்துறை முதன்மைச் செயலர்களை தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக கூறிய நீதிபதிகள்,

தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day