திடீரென வளைந்த கார் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இண்டிகேட்டர் போடாமல்  திரும்பிய கார் மீது இருசக்கர வாகனம் மோதி 2 பெண்கள் தூக்கிவீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மாத்தூரில் இருந்து தருமபுரி நோக்கி பெண்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். குள்ளனூர் பகுதியில் வந்தபோது இண்டிகேட்டர் போடாமல் திடீரென கார் திரும்பியதால் அவர்களது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.  

Night
Day