மயிலாடுதுறை: சேமிப்புக் கிடங்குகள் மூடப்பட்டதால் காத்திருக்கும் லாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகள் மூடப்பட்டதால், பல ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.  சம்பா மற்றும் தாளடி அறுவடை நெல்மணிகள், 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் நடந்தது. ஆனால், மாணிக்க பங்கு, எடமணல் ஆகிய இரண்டு சேமிப்பு கிடங்குகள் மட்டுமே திறந்திருப்பதால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து இருப்பதாக லாரி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டினர். பல்லாயிரக் கணக்கான டன் நெல் மூட்டைகளுடன் லாரிகள் தேங்கி நிற்கின்றன. வானதிராஜபுரம், கடலங்குடி, பெருஞ்சேரி, ஆக்கூர் உள்ளிட்ட தற்காலிக சேமிப்பு கிடங்குகளை திறக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Night
Day