கிருஷ்ணகிரி: எம்-சாண்ட் மட்டும் கொட்டி சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூரில், தரமற்ற சாலை அமைப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் பண்ணந்தூர் பகுதிக்கு செல்வதற்கு, ஏரிக்கரை மீது 2 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்துள்ளனர். தார் சாலை அமைப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. ஆனால், அதன் மீது லேசாக தூவுவதற்கு பதிலாக அடிக் கணக்கில் வீசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையின் அகலம் சீரற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டும் மக்கள், உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

Night
Day