நீலகிரியில் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கெத்தை மலை பாதையில் முகாமிட்ட காட்டு யானைகளால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஒருவார காலமாக 2 குட்டிகளுடன் 3 பெண் யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதே போன்று சாலையை மறித்து உலா வந்த யானைகளை விரட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒலி எழுப்பிய போது ஆக்ரோசமாக அனைவரையும் துரத்தியது. நீண்ட முயற்சிக்கு பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. 

Night
Day