புழல் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 24 கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.35 அடியாக உள்ளது. ஏரியில் 3.645 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில், தற்போது 2.947 டிஎம்சியாக உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி 750 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால், ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Night
Day