புயல் : நாகையில் 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புயல் சின்னம் காரணமாக கடலுக்கு செல்லாததால் நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த பகுதி மற்றும் தொடர்ந்து உருவான மோன்தா புயல் காரணமாக கடந்த 21ம் தேதி முதல் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர், ஆற்காட்டுதுறை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். 

Night
Day