தூத்துக்குடியில் மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை - மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை எதிரொலியால் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று நான்காவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது 

Night
Day