நீலகிரி: வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உதகை அருகே வளர்ப்பு நாயை, சிறுத்தை கவ்விச் சென்ற வீடியோ வெளியாகி பொதுமக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில், உதகை அருகே உள்ள எல்லநள்ளி, ஆலன் நகர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு நுழைந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை கவ்விச்சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Night
Day