நீலகிரி: தனியார் பள்ளி வளாகத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரை கண்டு மாணவிகள் உற்சாகமடைந்தனர். ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வழக்கமாக ஜிம்கானா பகுதியில் தரையிறங்கும் நிலையில், தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியார் பள்ளியில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரை பார்த்த மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், அதனை புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.

varient
Night
Day