சென்னை: ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வடமாநில தம்பதி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பாரிமுனை அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். தம்பு நாயக்கன் தெருவில் குடியிருந்து வரும் நிரஞ்சன் என்பவரின் தகப்பனார் சாந்திலால் என்பவர் கடந்த 1995-ம் ஆண்டு 999 சதுர அடி கொண்ட இடத்தை வாங்கி அனுபவித்து வந்துள்ளார். அவரது இறப்புக்கு பின்னர் உறவினர் ரங்கோட் சிங் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது குறித்து நிரஞ்சன் சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி புலனாய்வு பிரிவில் புகாரளித்தார். விசாரணையில் ரங்கோட் சிங்  மற்றும் அவரது மனைவி ஜந்தாதேவி ஆகிய இருவரும், நில அபகரிப்பு செய்தது உறுதியானது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

varient
Night
Day