எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் இரா.பெருமாள் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் 2.0 என சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது என கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்தார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதில் பழக்கப்பட்டவர்கள் தான் திமுகவினர் என குற்றம்சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, சினிமா துறையை ஸ்டாலின் குடும்பம் ஆட்டி வைப்பதாகவும் கூறினார். 2026-ல் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி நிச்சயம் அமையும் எனவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட கூறினார்.