திருவாரூர்: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமத்தினர் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தென்பரை ஊராட்சியில் உள்ள  பாலையூர் சங்கரமூர்த்தி தெருவுக்கும்- தெற்கு தென்பரை கிராமத்திற்கும் இடையே இருந்த சிறிய கம்பி பாலம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலத்தை சீரமைத்து தரக்கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day