தென்காசி: கெட்டுப்போன கேக்கை சாப்பிட்ட 2 சிறுமிகளின் உடல்நல பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கெட்டுப்போன கேக்கை சாப்பிட்ட 2 சிறுமிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிவநாடனூரைச் சேர்ந்த மோகன், தனது மூத்த மகளின் பிறந்த நாளுக்காக பாவூர்சத்திரத்தில் உள்ள இனிப்பு கடையில் கேக் வாங்கியுள்ளார். பிறந்தநாள் முடிந்ததும் கேக்கை சாப்பிட்ட அவரது 2 மகள்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் கேக்கை ஆராய்ந்து பார்த்தபோது, அது கெட்டுபோய் இருந்தது தெரிந்துள்ளது. தகவல் அறிந்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இனிப்பு கடையில் இருந்த கெட்டுப்போன உணவு பண்டங்களை பினாயில் ஊற்றி அழித்து, 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Night
Day