மயிலாடுதுறை: ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேடு கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அவர்கள், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் போராட்டத்தால் சீர்காழி மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Night
Day