தஞ்சாவூர்: சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவியை துரத்திய மாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை மாடு ஒன்று துரத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் அதிகளவில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் மாநகராட்சியினர் அதனை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாடு ஒன்று அந்த மாணவியை துரத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாடு விரட்டியதால் பதறியடித்து ஓடிய மாணவியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

Night
Day