திருப்பூர்: தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாக புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் தரமற்ற சாலை அமைக்க முயல்வதாகக் கூறி, 40-வது வார்டில் பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர். இடுவம்பாளையம் அடுத்த ஸ்ரீசக்தி அவென்யூவில் மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கலவை எதுவும் போடாமல் மாநகராட்சி ஒப்பந்ததாரர் நேரடியாக தார்ச்சாலை அமைப்பதாகவும், இதுபோன்ற தரமற்ற சாலைகள் விரைவில் சேதமடைந்து விடும் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எனவே, தரமான சாலை அமைப்பதாக இருந்தால் பணிகளை தொடங்கலாம், இல்லையென்றால் வேண்டாமென ஜேசிபி இயந்திரத்துடன் சென்ற மாநகராட்சி ஒப்பந்ததாரரை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Night
Day