சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த 10 பேர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனர். காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சட்டவிரோதமாக டீசலை பதுக்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது. அதன் பேரில், போலீசார் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொன்னேரி, ஏ.சப்பாணிப்பட்டி, பெரியாம்பட்டி, ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக டீசல் விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 720 லிட்டர் டீசலை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day