கோவை: ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். ஒண்டிப்புதூரில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் சூர்யா நகரை இணைக்கும் ராமச்சந்திரா சாலையில் மட்டும் மேம்பாலம் கட்டப்படாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Night
Day