சிவகங்கை: உறவினர்கள் தங்களை பிரிக்க முயல்வதாக காதலர்கள் கதறல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தங்களை பிரிக்க முயன்ற உறவினர்களுக்கு எதிராக நடுச்சாலையில் கத்தி கூச்சலிட்டு பிரிய மறுத்த காதலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த அழகுபாண்டி, கோவையைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காரைக்குடியில் உள்ள ஐய்யனார் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு காரைக்குடி காவல் நிலையத்தில் தஞ்சமடைய சென்றுள்ளனர். அப்போது உறவினர்கள் அவர்களை பிரித்து அழைத்துச் செல்ல முயன்றபோது இருவரும் கட்டி அணைத்தப்படி கூச்சலிட்டு பிரிய மறுத்தனர். தொடர்ந்து போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அழகுபாண்டியின் பெற்றோர் லலிதாவை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 

Night
Day