வேலூர்: தெரு வழியாக லாரிகள் இயக்குவதாக சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் அருகே தெரு வழியாக அதிக பாரம் கொண்ட லாரிகள் அளவுக்கு அதிகமாக இயங்கப்படுவதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரங்காபுரத்தில் இருந்து செங்காநத்தம் செல்லும் பகுதியில் உள்ள மாதா கோவில் தெரு வழியாக அதிக ஜல்லி மண் உள்ளிட்ட அதிக பாரம் கொண்ட லாரிகள் அளவுக்கு அதிகமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது, இதனால் குடியிருப்புகள், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும். சாலை சேதம் அடைந்து பழுதடைந்துள்ளதால் அதிக பாரம் கொண்ட லாரிகளின் போக்குவரத்தை தடை செய்ய கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

varient
Night
Day