சேலம் : செந்தாரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி - திரளான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகையை ஒட்டி சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமர்சையாக நடைபெற்றன. அந்த வகையில், சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு அஞ்சாத காளையர்கள், வீறுகொண்டு மாடுகளின் திமிலை பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் அவர்களை அவர்களை உற்சாகப்படுத்தினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

varient
Night
Day