சென்னை: தனியார் கண்ணாடி கிடங்கில் பயங்கர தீவிபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அம்பத்தூரில் தனியார் கண்ணாடி கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கண்ணாடி கிடங்கு உள்ளது. இங்கு இன்று காலை எதிர்பாரா விதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தீவிபத்து காரணமாக கிடங்கை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்ததால், அப்பகுதியில் இருந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Night
Day