சென்னை : போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 7வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இன்று 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அராஜகத்தில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

varient
Night
Day