சென்னை : கடற்கரை - தாம்பரம் இடையே 44 மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 44 மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்துவருவதால், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கடற்கரை - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று நடைபெறவுள்ளது. இதனால், கடற்கரை - தாம்பரம் இடையேயான 44 மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Night
Day