சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்‍கு தடைவிதிக்கும்படி செந்தில் பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கும்படி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. இந்நிலையில், தனக்‍கு ஜாமீன் கோரியும், 3 மாதங்களில் வழக்கை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உச்சமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து அவரது கோரிக்‍கையை நிராகரித்தது. ஆனால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தது.

Night
Day