அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுபானக்‍கொள்கை முறைகேடு வழக்‍கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரும் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்‍க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்‍கில் அமலாக்‍கத்துறையினரால் கடந்த மாதம் 21 ஆம்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்‍கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அமலாக்‍கத்துறை காவல் இன்று நிறைவடைந்த நிலையில் அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 15 ஆம் தேதி வரை திஹார் சிறையில் காவலில் வைக்‍க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டார்.

Night
Day