"பான்" - ஆதார் இணைப்புக்கு நாளையே கடைசி நாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள், வரும் 31ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. காலக்கெடுவுக்குப் பிறகு இணைக்க முயற்சித்தால்  ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். இந்நிலையில், பான் எண் இல்லாவிட்டால், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும், வங்கிக் கணக்கு தொடங்குதல், வருமான வரி தாக்கல், பங்குச் சந்தை பரிவர்த்தனை உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது  என்பது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day