தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,360 அதிகரித்து ரூ.1,00,560-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து மீண்டும் ஒரு லட்சத்தை கடந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் 720 ரூபாய் உயர்ந்தது. இதன்மூலம் ஒரேநாளில் சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
அதேநேரம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 231 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day