ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை மணலியில் உள்ள உரம் உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மணலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான உரம் உற்பத்தி தொழிற்சாலையில், 300க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலைக்குள் செல்போன்கள் எடுத்து செல்ல தடை உள்ளதை கண்டித்தும், உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

varient
Night
Day