எழுத்தின் அளவு: அ+ அ- அ
அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட போயிங் ரக ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட போயிங் ரக ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் உள்ள மெகானி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவ மாணவர் விடுதியில் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 179 நபர்கள் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.