"பாதிக்கப்பட்டவர்கள் உணரும் வலியை உணர்கிறேன்" - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து மனதை உடைப்பதாக தெரிவித்துள்ளார். பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதற்றம் ஆகியவை நினைத்துப் பார்க்க முடியாதது என குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, இந்த நம்பமுடியாத கடினமான தருணத்தில் தனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Night
Day