விமான விபத்து: இங்கிலாந்து பிரதமர் வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத் விமான விபத்து குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், பல பிரிட்டிஷ் பிரஜைகளுடன் லண்டனுக்குச் சென்ற விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகி வருவது மிகவும் வேதனையளிப்பதாக கூறியுள்ளார். நிலைமை குறித்து தொடர்ந்து அறிந்து வருவதாகவும் இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day